அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசை தொடர்ந்து ராஜஸ்தான், அசாம் உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கும் ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் அகவிலைப்படி 38% லிருந்து 42%மாக உயர்த்தப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இனி வரும் காலங்களில் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கும் போதெல்லாம் தமிழகத்திலும் அறிவிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து உத்தரகாண்ட் மாநில அரசும் அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.
போ.., போ.., இதோட ஆட்டம் அவளோ தான்.., முக்கிய சீரியலுக்கு எதிர்நீச்சல் வச்ச ஆப்பு!!
இதன் மூலம் மாநிலத்தில் உள்ள சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்துள்ளனர். விலைவாசி உயர்வால் சிரமப்பட்டு வந்த ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.