உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்தரா சிங் ராவத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அம்மாநில மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
உத்தரகாண்ட் முதல்வர்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது உள்ள நிலவரப்படி கொரோனாவால் 19 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அம்மாநிலத்தின் முதல்வராக திரிவேந்தரா சிங் ராவத் உள்ளார்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தனது உதவியாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இவர் தன்னை 3 நாட்கள் தனிமைபடுத்தி கொண்டார்.
தொற்று உறுதி:
பின், தன் அன்றாட அலுவல்களை கவனிக்க ஆரம்பித்தார். பின், தனக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை உறுதி செய்ய பரிசோதனை மேற்கொண்டார். அதில் இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தலைமை ஏற்க இருந்த பல கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அவர் தன்னை தானே 14 நாட்கள் சுய தனிமைக்கு உட்படுத்த உள்ளார். ஏற்கனவே இன்று தள்ளி வைக்கப்பட்டிருந்த அரசாங்க அலுவல் கூட்டங்கள் மீண்டும் தள்ளி வைக்கப்படவுள்ளது.