தமிழகத்தில் பொதுமக்களின் குறைகளை எளிதாக நிவர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டந்தோறும் மாதத்தில் 4வது புதன்கிழமை, குறிப்பிட்ட வட்டத்தில் முகாம் அமைக்கப்பட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” எனும் புதிய திட்டத்தை முதல்வர் அறிமுகப்படுத்தி உள்ளார்.
இத்திட்டத்தின் படி, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இதர அதிகாரிகள், புதன்கிழமை காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை முகாமில் தங்கி, பொதுமக்களிடம் பெறப்படும் புகார் மனுக்களை பரிசீலித்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் . இத்திட்டம் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை (ஜன.31) அமலுக்கு வருவதாக தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
PM கிஷான் திட்ட விவசாயிகளே.., இனி 2000 இல்ல 3000 வழங்கப்படும்.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!