தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் 2022-23 ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்று வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு, “இளைஞர் நிதி” மூலம் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தில் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 எனவும், டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.1,500 எனவும் இரண்டு ஆண்டுக்கு உதவித்தொகை வழங்க உள்ளனர். பயன் பெற விரும்புபவர்கள் படிப்பை முடித்து 180 நாட்களுக்கு பிறகும் வேலையில்லாமல் இருக்க வேண்டும். அதேபோல் உயர்கல்விக்கும் விண்ணப்பித்து இருக்க கூடாது போன்ற ஒரு சில நிபந்தனைகளும் வரையறுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.