பொதுவாக மக்களை அதிகம் கவர வேண்டும் என்று தொலைக்காட்சி நிறுவனங்கள் புது புது ரியாலிட்டி ஷோக்களை அறிமுகப்படுத்தி என்டர்டைன்மெண்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் என்ற ஷோவை விஜய் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தியது. இந்த ஷோ தொடங்கும் போது இதை பற்றி ஒன்னும் புரியாமல் மக்கள் குழம்பி போய் இருந்தனர். போக போக இந்த ஷோவை புரிந்து கொண்டு ஆதரவு கொடுக்க தொடங்கினர். தற்போது இந்த ஷோ மக்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருந்து வருகிறது. மேலும் இந்த ஷோவை மக்களை வெகுவாக கவர முக்கிய காரணமாக இருந்தது உலக நாயகன் கமல்ஹாசன் தான்.அவர் இந்த ஷோவை தொகுத்து வழங்கியதால் மட்டுமே இந்த ஷோ பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானது.
இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக தொகுத்து வழங்கிய கமல் தற்போது நடந்து வரும் 7வது சீசனையும் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் இதுவரை எந்த சீசனிலும் கெட்ட பெயர் வாங்காத கமல்,இந்த சீசனில் தொடர்ந்து வாங்கி வருகிறார். அதாவது பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்ததில் இருந்து அவர் குறித்து பல மீம்ஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் கமல் தற்போது ஒரு முடிவை எடுத்துள்ளாராம். அதாவது இந்த சீசன் தான் கமல் தொகுத்து வழங்கும் கடைசி சீசன் என்று கூறப்படுகிறது அடுத்த 8 வது சீசனை தொகுத்து வழங்க மாட்டார் என்றும் அதற்கு பதிலாக புதிய நட்சத்திரம் தான் தொகுத்து வழங்க போகிறார் என்றும் கூறப்படுகிறது. இது உண்மையா இல்லையா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.