நாடு முழுவதும் முதுகலை கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் எழுதும் யு.ஜி.சி. நெட் தேர்வு, கடந்த டிசம்பர் 6ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த நிலையில் மிக்ஜாம் புயலால் தமிழ்நாடு, ஆந்திரா மாநில பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பெரும்பாலானோர் யு.ஜி.சி. நெட் தேர்வில் கலந்து கொள்ள முடியாததால், தேர்வர்களுக்கு மறு வாய்ப்பு வழங்க வேண்டும் என MP வெங்கடேசன் ஒன்றிய கல்வி அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இதையடுத்து கடந்த டிசம்பர் 6ஆம் தேதி யு.ஜி.சி. நெட் தேர்வு எழுதாதவர்களுக்கு நாளை (டிசம்பர் 14) சென்னை மற்றும் நெல்லூரில் நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளனர். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.nta.ac.in மற்றும் https://ugcnet.nta.ac.in என்ற இணையதளங்களை பார்வையிடலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு நடந்த சம்பவம்.., அதிர்ச்சி தகவல்.!