கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட உதயநிதி ஸ்டாலின் – வைரலாகும் புகைப்படம்!!

0

தமிழகத்தின் புதிய எம்.எல்.ஏவாக பதவியேற்றுள்ள திமுகவின் உதயநிதி ஸ்டாலின் தற்போது கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை போட்டுள்ளார். தற்போது அதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உதயநிதி ஸ்டாலின்:

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டார் திமுகவின் உதயநிதி ஸ்டாலின். இவர் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். முதல் முறையாக தேர்தலில் களம் கண்ட உதயநிதி இந்த தேர்தலில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழகத்தின் புதிய எம்.எல்.ஏ வாக பொறுப்பேற்றுள்ளார். ஆனால் இவருக்கு அமைச்சர் பதவி எதுவும் வழங்கப்படவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இதில் இருந்து மக்கள் பாதுகாக்க இருக்க வேண்டும் என்றால் தடுப்பூசியை அனைவரும் செலுத்த வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. மேலும் பல அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தடுப்பூசியை செலுத்தி மக்களுக்கு விழுப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

‘இந்த வேகத்தில் சென்றால் தடுப்பூசி வழங்க 3 வருடம் ஆகும்’ – சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

தற்போது அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை செலுத்தியுள்ளார். மேலும் அவர் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா தடுப்பின் முக்கிய ஆயுதம் தடுப்பூசி. கொரோனாவை வெல்ல தடுப்பூசி மட்டுமே நம் முன்னிருக்கும் ஓர் வாய்ப்பு. இன்று நான் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here