ஜூன் மாதம் தொடங்க உள்ள, ஆசிய கால்பந்து தொடரில், இந்திய அணியானது, பலம் வாய்ந்த அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
ஆசிய கால்பந்து:
ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பாக ஆசியாவின் 17 வயதுக்குட்பட்ட தேசிய அணிகளுக்கு இடையே, கால்பந்து சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரின் 19வது சீசன் வரும் ஜூன் 15ம் தேதி முதல் ஜூலை 2ம் தேதி வரை தாய்லாந்தில் நடைபெற இருக்கிறது. இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சவுத் கொரியா உள்ளிட்ட 16 அணிகள் இந்த தொடரில் பங்குபெற உள்ளன.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த 16 அணிகளும், 4 குரூப்களின் கீழ் தலா 4 அணிகளாக பிரிப்பட்டு போட்டி போட உள்ளன. இதில், இந்திய அணியானது, குரூப் D யில், ஜப்பான், வியட்நாம் மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகளுடன் இணைந்துள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடரில், இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜூன் 17ம் தேதி வியட்நாம் அணிக்கு எதிராக மோத உள்ளது.
ஏப்ரல் 3 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை.., அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!!
இதனை தொடர்ந்து, ஜூன் 20ம் தேதி உஸ்பெகிஸ்தான் மற்றும் ஜூன் 23ம் தேதி ஜப்பான் அணிக்கு எதிராகவும் விளையாட இருக்கிறது. இந்த லீக் போட்டிகளின் முடிவில், முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். மேலும், இந்த தொடரின் அரையிறுதிப் போட்டி வரை முன்னேறும் அணிகள் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான FIFA உலக கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறும் என்பது குறிப்பிட்ட தக்கது.