ஏப்ரல் 3 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை.., அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!!

0
ஏப்ரல் 3 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை.., அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!!
ஏப்ரல் 3 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை.., அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் பங்குனி உத்தர பிரம்மோற்சவ விழா கடந்த மார்ச் 26 அன்று கொடியேற்றத்துடன் வெகு விமர்சியாக தொடங்கப்பட்டது. இந்த திருவிழாவில், ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு பல வித அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான, திருக்கல்யாண உத்ஸவம் நாளையும் (ஏப்ரல் 1), வரும் 3ம் தேதி தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, வரும் 6ம் தேதி தெப்ப திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவை காரைக்கால் மக்கள் கொண்டாடுவதற்காக, மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் புதிய பாடப்பிரிவுகள் விரைவில் அறிமுகம்., கல்வி அதிகாரி முக்கிய தகவல்!!!

அதாவது, வரும் 3ம் தேதி (திங்கள் கிழமை) ஸ்ரீ கைலாசநாதர் தேர் திருவிழா நடைபெற இருப்பதால், அன்று ஒருநாள் மட்டும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here