இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் FAME-I எனும் முதல் கட்ட திட்டத்தின் கீழ் ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இரு சக்கர உட்பட மின்சார வாகனங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பொதுமக்களிடையே இருசக்கர மின்சார வாகனம் நல்ல வரவேற்பு பெற்று வருவதால், டெஸ்லா உள்ளிட்ட பிரீமியம் மின்சார கார் உற்பத்திக்கான ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் FAME-II இரண்டாம் கட்ட திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ.11,500 கோடி நிதி ஒதுக்கீட்டை புதிய திட்டத்திற்கு மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.