இந்தியாவில் COVID-19 நிவாரணத்திற்காக ட்விட்டர் 15 மில்லியன் டாலர் நன்கொடை !!!
ட்விட்டர் நிறுவனம் 15 மில்லியன் டாலர் ஐ COVID-19 நிவாரணத்திற்காக இந்தியாவிற்கு நன்கொடை அளித்திருக்கிறது. இதன் அடிப்படையில் CARE க்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், எய்ட் இந்தியா மற்றும் சேவா இன்டர்நேஷனல் அமெரிக்கா நிறுவனத்திற்கும் தலா 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கி உள்ளது.
மைக்ரோ பிளாக்கிங் நிறுவனமான ட்விட்டர் இந்தியாவில் COVID-19 நெருக்கடியை சமாளிக்க 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது, கொடிய தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் நோக்கில் நன்கொடை அளித்துள்ளது.
$15 million split between @CARE, @AIDINDIA, and @sewausa to help address the COVID-19 crisis in India. All tracked here: https://t.co/Db2YJiwcqc ??
— jack (@jack) May 10, 2021
ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் பேட்ரிக் டோர்சி திங்களன்று இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்” இந்த தொகை கேர், எய்ட் இந்தியா மற்றும் சேவா இன்டர்நேஷனல் அமெரிக்கா ஆகிய மூன்று அரசு சாரா நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது” .