வாகனங்கள் அதிகரிப்பால் ஏற்படும் சாலை விபத்துகளை தடுக்கவும், போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக கையாளவும் தமிழக அரசு புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
சாலை விதிமுறை
தமிழகத்தின் பெரு நகரங்களில் குறிப்பாக சென்னையில் அதிக அளவு சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் அண்ணா நகரில் உள்ள முக்கிய 5 சந்திப்புகளில் TROZ திட்டத்தை தமிழக அரசு நிறுவியுள்ளது. இதன்மூலம் ஹெல்மெட், ட்ரிபிள்ஸ், சீட் பெல்ட் என போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களை கண்டறிந்து தானாகவே அபராத இ-சலான் உருவாக்குகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
தற்போது இந்த திட்டத்தால் கிட்டத்தட்ட 29 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மேலும் மூன்று முக்கிய இடங்களில் TROZ திட்டம் நிறுவ தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிக்னல் தெளிவாக தெரிய LED கம்பம் மற்றும் பழமையான 68 சிக்னல் கம்பங்களை மாற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வாரிசின் டிரைலரில் CSK வின் தல தோனி…, ஆட்ட நாயகனாக மாஸ் காட்டிய வீடியோ வைரல்!!
இதைத்தொடர்ந்து விபத்து மற்றும் சமூக ஊடக அழைப்புகளுக்கு போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க ரோந்து வாகனம், ரிமோட் சென்சார் சிக்னல் என போக்குவரத்துறைக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. இதன் காரணங்களால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கையாள 104 சிக்னல்களில் ஒலிபெருக்கி அமைத்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.