தமிழகத்தில் உருவ கேலியால் நடந்த விபரீதம் – 13 வயது பள்ளி மாணவி தற்கொலை!!

0

திருச்சி மாவட்டத்தில் 8ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி, பல்வேறு முயற்சிகள் செய்தும் தனது உடல் எடை குறையாத மன விரக்தியில் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி தற்கொலை:

திருச்சி மாவட்டத்தின் கண்டோன்மெண்ட் பகுதி, அலேக்ஸாண்ட்ரியா சாலையில் மணி-ஷர்மிளா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது ஒரே மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் சற்று அதிக உடல் எடையுடன் காணப்படுவதால், பலரும் இவரை கிண்டல் செய்து வந்தனர். இதனால், பல்வேறு உடற்பயிற்சிகளையும், உடல் எடையை  குறைக்க கூடிய பல்வேறு உணவுப் பண்டங்களையும் சாப்பிட்டு வந்துள்ளார். ஆனால், இது எதுவுமே பலன் அளிக்காததால் மிகுந்த மன விரக்தியின் உச்சத்திற்கே சென்றுள்ளார்.

இந்த நிலையில், தனது பெற்றோருடன் நேற்று இரவு உணவு சாப்பிட்டு முடித்த பின் தூங்க சென்ற அந்த மாணவி வெகுநேரமாகியும் கதவை திறக்காததால், காலையில் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது, மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உருவ கேலியின் காரணமாக இவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here