பெண் இயக்குனர் மீது தேச துரோக வழக்கு – அதிர்ச்சியில் திரையுலகம்

0

லட்சத்தீவில் கொரோனா தொற்று இல்லாமல் இருந்ததாகவும் ஒன்றிய அரசு தான் லட்சத்தீவில் கொரோனா பரவ காரணம் என்றும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்த ஆயிஷா சுல்தானா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆயிஷா சுல்தானா:

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக பரவி வரும் நிலையில் மக்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர். அண்மையில் லட்சத்தீவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பல ஹேஸ்டாக்குகள் வலம் வந்தன. ஒன்றிய அரசு லட்சத்தீவுக்கு புதிய நெருக்கடி கொடுத்து வருவதாக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த விவாகாரத்தில் பெண் இயக்குனர் ஒருவர் லட்சத்தீவில் ஒன்றிய அரசு கொரோனாவை பரப்பியதாக கூறியாது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

லட்சத்தீவில் ஒன்றிய அரசு நில உரிமைகள் தொடர்பான விதிகளில் மாற்றம் கொண்டு வர உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் பலரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதுவரை லட்சத்தீவில் இருந்து கேரளாவுக்கு நடைபெற்று வந்த சரக்கு போக்குவரத்து, இனி கேரளாவில் இருந்து மங்களூருவுக்கு மாற்றப்பட உள்ளது.

இது குறித்த டிவி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட மலையாள பெண் இயக்குனரும், மாடலுமான ஆயிஷா சுல்தானா, லட்சத்தீவில் இதுவரை கொரோனா பரவல் இல்லாமல் இருந்ததாகவும் ஒன்றிய அரசு தான் லட்சத்தீவில் கொரோனா பரவ காரணம் என்றும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். போலியான தகவல்களை பரப்பியதாக இவர்மீது கொடுக்கப்பட்ட புகார்களை தொடர்ந்து ஆயிஷா சுல்தானா மீது 124A மற்றும் 153B உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here