வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ‘மிக்ஜம்’ புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இந்த புயல் காரணமாக இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டத்தில் உள்ள வங்கிகள், IT நிறுவனம், பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அறிவித்திருந்தனர்.
தற்போது இதை தொடர்ந்து மற்றொரு அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதாவது மிக்ஜம் புயல் நாளை கரையை கடக்க கூடும் என்பதால் இந்த மாவட்டங்களில் சூறை காற்றுடன் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் நாளையும் இந்த மாவட்டங்களுக்கு பொது விடுமுறை என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் இயங்காது எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
மக்களே உஷார்., இந்த பகுதிகளில் நாளை மின்தடை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!