மக்களே.., குடைய எடுத்துக்கோங்க.., தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் நாளை வெளுத்து வாங்கப்போகும் கனமழை!!

0
மக்களே.., குடைய எடுத்துக்கோங்க.., தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் நாளை வெளுத்து வாங்கப்போகும் கனமழை!!
மக்களே.., குடைய எடுத்துக்கோங்க.., தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் நாளை வெளுத்து வாங்கப்போகும் கனமழை!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வர இருக்கும் நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் கனமழை விடாமல் தொடர்ந்து பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டி இருக்கும் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். மேலும் நாளை திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கலைஞர் மகளிர் ரூ.1,000 திட்டத்தின் மேல்முறையீடு விண்ணப்பம்., இவர்களுக்கு உரிமை தொகை கண்டிப்பாக கிடைக்கும்? அமைச்சரே வெளியிட்ட அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here