தமிழக மக்களுக்கு அலர்ட்.,  வெளுத்து வாங்க இருக்கும் மழை.., மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

0
தமிழக மக்களுக்கு அலர்ட்.,  வெளுத்து வாங்க இருக்கும் மழை.., மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் கொட்டி தீர்த்த பருவ மழையால் பெரும்பாலான மக்கள் வெள்ளத்தில் மூழ்கி தவித்து வந்தனர். அதைத் தொடர்ந்து பருவ மழை நின்ற நிலையில் பனிப்பொழிவு மக்களை உறைய வைத்திருந்தது. இந்நிலையில்  அடுத்த ஏழு நாட்களுக்கு மழை குறித்த முன்னறிவிப்பை இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு  காணப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதோடு 17/2/2024 முதல் 22/2/2024 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதியில் வறண்ட வானிலை நிலவுமாம். மேலும் தென்தமிழக கடலோர பகுதி, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் சூறாவளி காற்று 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடுமாம். இதனால் இன்று மற்றும் நாளை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here