மக்களே அலர்ட்.., தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..,சென்னை வானிலை மையம் தகவல்!

0

கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன்படி மதுரை, தேனி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூா், சிவகங்கை, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட ,மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here