மக்களே உஷார்.. இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

0
சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்றும் நாளையும் (ஜூன் 10,11) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் ஜூன் 10 முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை மேலே குறிப்பிட்ட பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரையில், வானம் ஓரளவுக்கு மேகமுட்டத்துடனே காணப்படும், இருந்தாலும் அதிக பட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here