தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை மாற்றம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்றும் (மார்ச் 7) நாளையும் (மார்ச் 8) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையை நிலவக்கூடும். ஆனாலும், உள் தமிழகம் மற்றும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க கூடும்.
TNPSC குரூப் 4 தேர்வர்களே…, இதுக்கு இன்னும் நீங்க APPLY பண்ணலயா?? உடனே முந்துங்கள்!!
இதனை தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மார்ச் 7 ஆம் தேதி முதல் மார்ச் 13 ஆம் தேதி வரை வறண்ட வானிலையை நிலவக்கூடும். சென்னையை பொறுத்த வரையில், வானம் மேகமூட்டத்துடனே இருக்குமே தவிர, அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கு கூடும். இந்த வானிலை மாற்றம் மீனவர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்தால் எந்த ஒரு எச்சரிக்கையும் அளிக்கப்படவில்லை.