தினசரி விலை மாற்றத்தை எதிர்கொள்கின்றன பெட்ரோல் மற்றும் டீசலின் விலை. கடந்த சில நாட்களாக சதத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 31 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும் டீசலின் விலை நேற்றைய விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.
அனைத்து தரப்பு மக்களும் தங்களின் அன்றாட பணிகளுக்கு அவர்களின் வாகங்களை நம்பி உள்ளனர். இந்நிலையில் இந்த விலை ஏற்றம் மக்களை பெரிதும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. மேலும் இந்த எரிபொருட்கள் விலை உயர்வினால் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பால் போன்றவற்றின் விலைகளும் அதிகரிக்கும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. மேலும் இந்த விலை ஏற்றத்தை கண்டித்து மக்கள் ஆங்காங்கே போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை மாதம் இரு முறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியதிலிருந்து இதன் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் படி , இன்று தமிழக தலைநகர் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 31 காசுகள் உயர்ந்து 100.75ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே நேரம் டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் டீசல் 93.91ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்