தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் தங்கத்தின் விலை ஏறி, இறங்கிக் கொண்டே இருந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 168 ரூபாய் அதிகரித்து உள்ளதால் மக்கள் கவலை அடைந்து உள்ளனர்.
இன்றைய விலை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டு நகை வியாபாரம் நடைபெறாமல் இருந்தது. இருப்பினும் முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்கத்தின் மீது முதலீடு செய்த காரணத்தால் விலை அதிகரித்துக் கொண்டே சென்றது. தற்போது கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் தொடங்கியதால், அதன் தேவை அதிகரித்து விலையும் அதிகரித்து வருகிறது.
இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (22 காரட்) கிராமுக்கு 21 ரூபாய் அதிகரித்து ரூ. 4,530க்கும், சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து ரூ. 36,240 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ. 52.40க்கும், ஒரு கிலோ ரூ. 52,400 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.