தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்து உள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
தங்கத்தின் விலை:
உலக அளவில் பொருளாதாரத்தை தலைகீழாக திருப்பி போட்டுள்ளது கொரோனா பாதிப்பு. இதனால் ஆலைகள் செயல்படாமல் பொருட்கள் உற்பத்தி குறைந்த காரணத்தால் விலை அதிகரிக்கிறது. மேலும் பங்குச்சந்தையிலும் இதன் எதிரொலி இருப்பதால் முதலீட்டாளர்கள் கவனம் முழுவதும் தங்கத்தின் மீது திரும்பி உள்ளனர். இதனால் அதன் மீதான முதலீடு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதன் காரணமாக விலையும் நாளுக்குநாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் திடீர் ராஜினாமா – மனோஜ் சின்கா நியமனம்!!
சென்னையில் இன்று ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 27 ரூபாய் அதிகரித்து ரூ.5,351 க்கும், ஒரு சவரன் 216 ரூபாய் உயர்ந்து 42,808 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இவ்வாறு விலை உயர்ந்து கொண்டே சென்றால் தங்கத்தை மியூசியத்தில் காட்சிப் பொருளாக தான் பார்க்க வேண்டும் போல என புலம்பி வருகின்றனர்.