இந்திய அரசால் கற்பித்தல் தரத்தை மேம்படுத்துவதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) 2011 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி, தமிழகத்தில் கடந்த 2012 ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் (TNTET) தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்த TNTET தேர்வில் தேர்ச்சி பெறும், ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் பணி வழங்கப்பட்டு வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த தகுதி தேர்வு தமிழகத்தில் அறிமுகமான பிறகு, இனி TNTET தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு தான் ஆசிரியர் பணி வழங்கப்படும் என்ற நிலை உருவானது. இதனால், கடந்த 2011 ம் ஆண்டுக்கு முன்பு நேரடியாக தேர்வு செய்யப்பட்டு அரசு பள்ளிகளில் பணி செய்யும் ஆசிரியர்களும் TNTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு எதிராக பல ஆசிரியர்கள் இணைந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த விஷயத்தில் அஜித் மீது உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் ரசிகர்கள்.., எதற்கு தெரியுமா?
இந்நிலையில், இன்று விசாரணைக்கு வரப்பட்ட இந்த வழக்கிற்கு 2011 ஆம் ஆண்டுக்கு முன் நேரடியாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் TNTET தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பணியில் தொடரலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், இந்த குறிப்பிட்ட ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற வேண்டுமானால் TNTET (தகுதி) தேர்வு தேர்ச்சி என்பது முக்கியம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.