தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இப்பொழுது ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து வருகிறது. அதுமட்டுமின்றி நாளுக்கு நாள் பல ட்விஸ்ட்டுகளுடன் சீரியலை ஒளிபரப்பி வருகின்றனர். அர்ஜுன் எப்பொழுது சிக்குவார்?? தமிழின் போராட்டம் வெற்றி பெறுமா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில் நடேசனுக்கு நாளுக்கு நாள் சந்தேகம் வலுத்து கொண்டே செல்கிறது. சிசிடிவி கேமராவை நடேசன் செக் செய்வதற்காக செல்ல அப்பொழுது, ஏதேதோ செய்து அதையும் அழித்து விட்டார். இப்படியே சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் தான் மீண்டும், அர்ஜுன் மாட்டிக்கொள்ளும் சூழ்நிலை வர போகிறது.
இதில் உச்சகட்ட கோவமடையும் கோதை அர்ஜுனை கம்பெனிக்கே வர வேண்டாம் என்று சொல்லி விடுவாராம். உச்சகட்ட கோவத்தில், கோதை கத்தி விட ராகினி எப்போ பாரு என் புருஷனை தான் திட்றீங்க என்று மேலும் சண்டை இழுப்பாராம். மேலும் அர்ஜுனின் பித்தலாட்டம் தெரிய வருவதற்கு வாய்ப்புகளும் உண்டு.