TNPSC தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….,காலியிடங்கள் 10 ஆயிரமாக உயர்வு….,

0
TNPSC தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு....,காலியிடங்கள் 10 ஆயிரமாக உயர்வு....,
TNPSC தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு....,காலியிடங்கள் 10 ஆயிரமாக உயர்வு....,

TNPSC குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கையை 10 ஆயிரமாக உயர்த்தி அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

காலியிடங்கள் உயர்வு

தமிழக அரசுத்துறையில் காலியாக இருக்கும் அனைத்து பணியிடங்களும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலமே நிரப்பப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டில் குரூப் 4 பதவிகளுக்கான போட்டித்தேர்வுகள் TNPSC சார்பில் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கழித்து நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வை தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பேர் எழுதி இருந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால், காலியிடங்கள் வெறும் 7,381 ஆக மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், குரூப் 4 காலியிடங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது. இதனை கவனத்தில் கொண்ட அரசாங்கம், TNPSC காலியிடங்களை 10,117 ஆக அதிகரித்து தற்போது அறிவித்துள்ளது. இதன் மூலம், 274 ஆக அறிவிக்கப்பட்டிருந்த VAO பதவிகளுக்கான காலியிட எண்ணிக்கை தற்போது 425 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2023: வலுவான வீரர்களுடன் களமிறங்கும் RCB அணி., ரசிகர்களை குஷி படுத்தும் நிகழ்ச்சி!!!

அதே போல, டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான காலியிடங்களும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. இது தவிர, TNPSC இன் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வீட்டு வசதி வாரியம் போன்ற துறைகளில் அறிவிக்கப்பட்ட காலியிடங்கள் எண்ணிக்கை 163 லிருந்து 252 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here