ஐபிஎல் 2023: வலுவான வீரர்களுடன் களமிறங்கும் RCB அணி., ரசிகர்களை குஷி படுத்தும் நிகழ்ச்சி!!!

0
ஐபிஎல் 2023: வலுவான வீரர்களுடன் களமிறங்கும் RCB அணி., ரசிகர்களை குஷி படுத்தும் நிகழ்ச்சி!!!
ஐபிஎல் 2023: வலுவான வீரர்களுடன் களமிறங்கும் RCB அணி., ரசிகர்களை குஷி படுத்தும் நிகழ்ச்சி!!!

இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பான தல தோனியின் ஆட்டத்தை காணும் நேரமும் நெருங்கி வருகிறது. வருகிற மார்ச் 31ம் தேதி CSK அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஐபிஎல் போட்டியை துவக்கி வைக்க உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதைத்தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் இதுவரை வலுவான வீரர்களை கொண்ட விராட் கோஹ்லியின் RCB அணி ஒரு முறை கூட பட்டம் வெல்லவில்லை. இந்நிலையில் இம்முறை சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் விராட் கோஹ்லி தலைமையில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின், ஆகாஷ் தீப் மற்றும் ஹர்சல் படேல் உள்ளிட்ட தரமான வீரர்கள் இணைய உள்ளனர்.

ஏப்ரல் 2ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் RCB அணி மோத உள்ள போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் மாற்றமில்லை. இந்நிலையில் மார்ச் 26ம் தேதி “RCB Unbox” என்ற நிகழ்ச்சியை ரசிகர்களுக்காக RCB நிர்வாகம் வழங்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் விராட் கோலி, டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல் ஆகியோரும் கலந்து உள்ளதாக தகவல் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here