TNPSC குரூப்-4 தேர்வு முடிவு எப்போ? Cut off குறித்த பல லேட்டஸ்ட் தகவல்கள் உள்ளே!!

0
TNPSC குரூப்-4 தேர்வு முடிவு எப்போ? Cut off குறித்த பல லேட்டஸ்ட் தகவல்கள் உள்ளே!!
TNPSC குரூப்-4 தேர்வு முடிவு எப்போ? Cut off குறித்த பல லேட்டஸ்ட் தகவல்கள் உள்ளே!!
தமிழ்நாடு அரசுத் துறைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் “குரூப் 4” எழுத்து தேர்வு மூலம் 7,301 அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதற்கான எழுத்துத் தேர்வு ஜூலை மாதமே முடிவடைந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கிட்டத்தட்ட 14 லட்சம் தேர்வர்கள் இந்த தேர்வில் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் நவம்பர், டிசம்பர் என இன்று வரை முடிவுகளை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது. ஆனால் சமீபத்தில் இந்த தேர்வுக்கான காலிப்பணியிடங்களில் 2,500 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்க உள்ளதாக தகவல் தெரிவித்தனர்.

இதனால், கட் ஆப் மார்க் இன்னும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த மாத இறுதிக்குளாவது தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிடும் என நம்பப்படுகிறது.  இது குறித்த கூடுதல் தகவலை தெரிந்துகொள்ள https://www.tnpsc.gov.in/Home.aspx என்ற இணையதளத்தை பின் தொடமாறு தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here