தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட 95 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வை கடந்த ஆண்டு நடத்தியது. இந்த முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வில் நடத்தப்பட்ட நிலையில் இதற்கான முடிவு கடந்த மார்ச் 7ஆம் தேதி நேற்று வெளியிடப்பட்டது. தற்போது இதைத் தொடர்ந்து இதில் தகுதி பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதாவது மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 26 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெற உள்ளது. இதனால் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் வருகிற 21 ஆம் தேதி இரவு 11:59 மணிக்குள் விடுபட்ட முழுமையான சான்றிதழ்களை அனைத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.