தமிழக மகளிர் ரூ.1,000 உரிமை தொகை திட்டம்: விரிவாக்கம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு?

0
தமிழக மகளிர் ரூ.1,000 உரிமை தொகை திட்டம்: விரிவாக்கம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு?
தமிழக மகளிர் ரூ.1,000 உரிமை தொகை திட்டம்: விரிவாக்கம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு?

தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி இத்திட்ட பலன்களை பெற 1.63 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில், ஒரு கோடியே ஆறு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களும், முன்பு விண்ணப்பிக்க தவறியவர்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவுறுத்தியதால், பலரும் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த நிலையில் திருநங்கைகள் பலரும், தங்களுக்கும் கலைஞர் மகளிர் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக அமைச்சர் கீதா ஜீவன் கூறுகையில், “திருநங்கைகளின் கோரிக்கை தொடர்பாக விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிடுவார்.” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதிரடியாக உயர்ந்த மின் கட்டணம்…, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here