தமிழகத்தை நோக்கி வீசும், மேற்கு திசை காற்றில் வேகம் மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் வானிலையில் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த வானிலை மாற்றத்தால், நேற்று (செப்டம்பர் 21) அதிகாலை சென்னை, வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.
Enewz Tamil WhatsApp Channel
தற்போது இதன் தொடர்ச்சியாக, இன்றும் தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், தேனி, திண்டுக்கல், சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
“சந்திரயான் 3” விண்கலத்தின் ரோவரை எழுப்பும் முயற்சி., இஸ்ரோ அறிவிப்பு!!!