தமிழகப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இன்று (ஆகஸ்ட் 24) முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரையிலும் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதில், குறிப்பாக தமிழகத்தின் உள் மாவட்டங்களான விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் வானிலை அறிக்கையின் படி, சென்னை மற்றும் அதன் புற நகரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனே இருக்குமே தவிர, நகரின் ஒரு சில இடங்களில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வெப்பநிலையை பொறுத்த வரையில், 26 டிகிரி செல்சியஸில் இருந்து, 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். இந்த வானிலை மாற்றத்தால் மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிகளில் இந்த பணிகள் தொடக்கம்.., பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!!