சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்றும் நாளையும் (பிப். 17, 18) இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகரிக்க கூடும் எனவும், பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 23 ஆம் தேதி வரை மேலே குறிப்பிட்ட பகுதிகளில் வறண்ட வானிலையை நிலவ கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4 தேர்வுக்கு இன்னும் 3 மாதமே…, குறுகிய காலத்தில் சிறந்த பயிற்சி…, மிஸ் பண்ணிடாதீங்க!!
சென்னையை பொறுத்த வரையில், வானம் ஓரளவுக்கு மேகமுட்டத்துடனே இருக்குமே தவிர அதிக பட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். மேலும், பிப்ரவரி 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தென் தமிழகம், மன்னர் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும் என்பதால் மீனவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள நாட்களில் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.