பான் அட்டைதாரர்களே.., இதை உடனே செஞ்சிடுங்க.., இல்லனா 10,000 அபராதம் விதிக்கப்படும்!!!

0
பான் அட்டைதாரர்களே.., இதை உடனே செஞ்சிடுங்க.., இல்லனா 10,000 அபராதம் விதிக்கப்படும்!!!
இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு எப்படி இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகிறதோ  அதேபோன்று பான் கார்டும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் இன்னும் சிலர் பான் கார்டின் முக்கியத்துவம் தெரியாமல் அலட்சியப்படுத்துகின்றனர். மேலும் இப்போது வங்கிகள் மட்டுமல்லாமல் அனைத்து பண பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு கட்டாயம் தேவைப்படுகிறது. இதனால் சமீபத்தில் பான் கார்டு வைத்துள்ள அனைவரும் ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை தெரிவித்திருந்தது.

தற்போது இதை தொடர்ந்து மற்றொரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது சமீப காலமாக ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பான் கார்டில் பொய்யான தகவல்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது போன்ற பான் கார்டில் பொய்யான தகவல்கள் இருந்தால் நிச்சயம் அவர்களின் வங்கிக் கணக்கு முடக்கப்படும். மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டு வைத்துள்ளவர்களிடம் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. இதனால் இரண்டு பான் கார்டுகள் இருந்தால் ஒன்றை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கும்படி தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here