இந்தியாவின், மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நேற்று (அக்டோபர் 20) உருவெடுத்தையடுத்து, இன்று (அக்டோபர் 21) தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் புயலாக மாற கூடும் என சமீபத்தில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையமானது தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது