தமிழகத்தில் நாளை மாவட்டத்தின் இந்த பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – வெளியான புதிய உத்தரவு!!

0
தமிழகத்தில் நாளை மாவட்டத்தின் இந்த பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - வெளியான புதிய உத்தரவு!!
தமிழகத்தில் நாளை மாவட்டத்தின் இந்த பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - வெளியான புதிய உத்தரவு!!

தமிழகத்தில், நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சில பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

விடுமுறை அறிவிப்பு:

தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு விரைவில் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது. இது போக, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி மாதமும், பொதுத்தேர்வு மார்ச் மாதமும் தொடங்க உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த நிலையில், நாளை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் விழாவின் முக்கிய நிகழ்வான, மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்வு நாளை நடைபெற இருப்பதால் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள, குறிப்பிட்ட சில தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்திய ஜம்பவான்கள் பட்டியலில் இணைந்த தீபக் சாஹர்…, ஒரு விக்கெட்டால் நிகழ்ந்த சம்பவம்!!

அவலூர்பேட்டை, மேல்மலையனூர், ஆலம்பூண்டி, மேல் பாப்பம்பாடி, செஞ்சி ஆகிய பகுதியில் அரசு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், இந்த விடுமுறையை ஈடுகட்ட 10 ஆம் தேதியான சனிக்கிழமை முழு வேலை நாளாக பள்ளி செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here