இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் படைப்பில் சமீபத்தில் வெளியான கோல்டு திரைப்படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
கோல்டு திரைப்படம்:
மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். இவர் தமிழில் நேரம் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தார். ஆனால் இந்த படம் சுமாராகவே தியேட்டரில் ஓடியது. அதன் பின்னர் எந்த படத்திலும் கமிட்டாகாமல் 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கோல்டு என்ற ஒரு படத்தை இயக்கியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த படத்தில் நடிகர் பிரித்விராஜ், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, செம்பன் வினோத் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 1ம் தேதி மலையாளத்தில் மட்டும் வெளியானது. அதன் பின்னர் அடுத்த நாள் தமிழில் வெளியானது. இப்படம் வெளியான நாளில் இருந்து கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது.
இந்திய ஜம்பவான்கள் பட்டியலில் இணைந்த தீபக் சாஹர்…, ஒரு விக்கெட்டால் நிகழ்ந்த சம்பவம்!!
இந்நிலையில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான் நிஜமாகவே ப்ளூ சட்டை மாறன், மனிஷ் நாராயணன் பரத்வாஜ் ரங்கன் ஆகியோர் என் படத்தை பார்த்து அவர்கள் என்ன விமர்சனம் கொடுக்க போகிறார்கள் என்று மக்களை விட நான் ஆர்வமாக இருக்கிறேன். எங்களுடைய நீண்ட நாள் உழைப்பிற்கு பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.