தமிழகத்தில் ஏப்ரல் 29ம் தேதி முழு  விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வ உத்தரவு!!

0
நாடு முழுவதும் மே 3ம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு - உள்துறை அமைச்சரவை அதிகாரப்பூர்வ உத்தரவு!!
தமிழகத்தில் வருகிற 8ம் தேதி முழு விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

திருச்சி மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி, அரங்கநாதசுவாமி திருக்கோயில் தேர் திருவிழா நடைபெற உள்ளதால், அன்றைய தினம் முழு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

விடுமுறை அறிவிப்பு:

தமிழகத்தில் 3ம் அலை பரவலுக்கு பின், கோயில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் வட்டத்தில் அமைந்துள்ள அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழா, வருகிற 29ம்  தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இந்த நாளில் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால், அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் முழுவதுமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஏதேனும் தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தால், இந்த விடுமுறை பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக, மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு கட்டும் பொருட்டு, மே 7 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here