தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான போட்டி தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது தொடக்கக்கல்வித்துறையில் இரண்டாம் நிலை ஆசிரியர் பதவிகளில் 1768 பணியிடங்களுக்கான அறிவிப்பை TN TRB தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 சான்றிதழை பெற்றிருப்பது கட்டாயம்.
அதன்படி தகுதியானவர்கள் வருகிற பிப்ரவரி 14 முதல் மார்ச் 15ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் http://www.trb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். விண்ணப்பித்தவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி OMR Based Exam நடத்தப்படும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மேலே இணைக்கப்பட்டுள்ள தேர்வாணையத்தின் அறிவிப்பை பார்த்துக் கொள்ளலாம்.