தமிழக பட்டதாரி ஆசிரியர்களே…, இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு…, TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
தமிழக பட்டதாரி ஆசிரியர்களே..., இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு..., TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தமிழக ஆசிரியர் தேர்வு வாரியமானது (TRB) கடந்த அக்டோபர் மாத இறுதியில் பட்டதாரி ஆசிரியர்கள் வட்டார வள மைய பயிற்றுநர் உள்ளிட்ட சுமார் 2000 த்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி, கடந்த டிசம்பர் 7ஆம் தேதி வரை இந்த பணிக்கான  விண்ணப்பங்கள் வரவேற்க்கப் பட்டிருந்தது. மேலும், கடந்த ஜனவரி 7 ஆம் தேதி இதற்கான தேர்வு நடைபெற இருந்தது.
ஆனால், கடந்த டிசம்பர் மாதத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெளுத்து வாங்கியதால் பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு இந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு 41,485 பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த தேர்வு காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 130 மையங்களில் ஒதுக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here