தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த வாரம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. தற்போது, மழையின் தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மிள தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், திருநெல்வேலி மின்சார வாரியமானது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, கனமழை காரணமாக திருநெல்வேலியில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள் மிகுந்த சேதம் அடைந்திருந்தன. இதனால், சரிவர மின் விநியோகம் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில், பழுதடைந்த மின் கம்பங்கள், மின் மாற்றிகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு 100% மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
கோலின்றி முடிந்த சூப்பர் லீக்…, பலம் வாய்ந்த ஒடிஷா அணியை கட்டுப்படுத்தி அசத்திய எதிரணி!!