தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மழைப்பொழிவு அதிகமுள்ள மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் இரவு முதல் கனமழை விட்டு விட்டு பெய்து வருவதாக கூறப்படுகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
எனவே பல்வேறு சாலைகளிலும் நீர் தேங்கி இருப்பதால் மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 10) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.