
தமிழகத்தில் நாளை மறுநாள் (நவ.12) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வேலை நிமித்தமாக தங்கி இருப்பவர்கள் பலரும் சொந்த ஊருக்கு திரும்ப ஆவலுடன் தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் பல ஆம்னி பேருந்துகளும் சாதாரண கட்டணத்தை விட 3 முதல் 5 மடங்கு வரை உயர்த்தி கட்டணம் வசூலித்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இது சொந்த ஊருக்கு செல்ல இருக்கும் பலர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என பாமக அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தி வருகிறார். இதனால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவதாகவும் அறிவுறுத்தி உள்ளார்.