பண்டிகை காலங்களை பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் சிறப்பாக கொண்டாடுவதற்காக அரசானது விடுமுறை அளிப்பதுடன், வெளியூரில் உள்ளவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு சிறப்பு போக்குவரத்து வசதியையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த வகையில், வரும் அக்டோபர் 23 மற்றும் 24 ஆம் தேதி ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.
Enewz Tamil WhatsApp Channel
இதற்காக, இன்று (அக்டோபர் 20) முதல் வரும் அக்டோபர் 22 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகளை இயக்க சென்னை போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, கூட்ட நெரிசல் அதிக அளவில் இருக்கும் கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் இருந்து கூடுதலாக 2,265 பேருந்துகளும், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து 1,700 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால், மகளிருக்கான இலவச பேருந்துகள் இந்த பண்டிகை காலத்தில் இயக்கப்படுவது என்பது பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழக அரசின் இந்த ஊழியர்களுக்கு 30% தீபாவளி போனஸ்., சென்னை தலைமை செயலகத்திற்கு பரந்த கோரிக்கை!!!