தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு – இன்று கண்டிப்பாக இதை முடிங்க! கல்வி இயக்குநர் சுற்றறிக்கை!!

0
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு - இன்று கண்டிப்பாக இதை முடிங்க! கல்வி இயக்குநர் சுற்றறிக்கை!!
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு - இன்று கண்டிப்பாக இதை முடிங்க! கல்வி இயக்குநர் சுற்றறிக்கை!!

தமிழகத்தில் இன்றைய தினம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் யாரேனும் ஒருவராவது, நிச்சயம் பள்ளிக்கு வர வேண்டும் என அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

அதிரடி உத்தரவு:

தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிந்து கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஒன்றரை வாரத்திற்கும் மேலாக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் அதை அனுபவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில், அக்டோபர் 5 ஆம் தேதியான இன்றைய நாளில் விஜயதசமி பண்டிகை, கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கல்விக்கு உகந்த இந்த நாளில், தங்கள் குழந்தைகளை முதன் முதலாக பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் பலரும் விரும்புவர்.

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.,,புதிய வசதி அறிமுகம்!!

இதனை கருத்தில் கொண்டு, இன்றைய தினம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் யாரேனும் ஒருவர் மட்டுமாவது பணிக்கு சென்று, அட்மிஷன் வேலைகளை கவனிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அனைத்து பள்ளி ஆசிரியர்களும் நிச்சயம் பின்பற்ற வேண்டும் என, மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here