தமிழக மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் போது, பேருந்துகளில் படிக்கட்டு பயணம் செய்வதால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க, கல்வித்துறை அமைச்சர் நிரந்தர தீர்வை அறிவித்தார்.
நிரந்தர தீர்வு:
தமிழக பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பெரும்பாலும் பள்ளிக்கு செல்வதற்கு பேருந்து சேவையை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த பேருந்து பயணத்தின் போது, பெரும்பாலான மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதால் தவறுதலாக கீழே விழுந்து உயிரிழக்கும், சோகம் நிகழ்கிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இந்த பிரச்சனை தொடர்கதையாக உள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் காலை நேரங்களில் பேருந்துகளை கூடுதலாக இயக்க போக்குவரத்து துறை அமைச்சரிடம், பேச உள்ளதாக தெரிவித்தார். இதனால் மாணவர்களின் படிக்கட்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.