தமிழக பள்ளி மாணவர்களே…, கல்விக் கடன் பெற நாளை (பிப். 15) சிறப்பு முகாம்கள்…, முழு விவரம் உள்ளே!!

0
தமிழக பள்ளி மாணவர்களே..., கல்விக் கடன் பெற நாளை (பிப். 15) சிறப்பு முகாம்கள்..., முழு விவரம் உள்ளே!!

தமிழக அரசானது, பள்ளி மாணவர்களின் எதிர்கால நலன் கருதி பல்வேறு சிறப்பு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாணவர்கள் கல்வி கடன்களை எளிதாக பெறுவதற்காக, தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் நாளை (பிப்ரவரி 15) சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முகாம்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு சார்பாக அழைப்பு. இந்த முகாம்களுக்கு வரும் மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், கல்விச் சான்று, நுழைவுத் தேர்வு முடிவுகள், கல்லூரி ஒப்புதல் கடிதம், கலந்தாய்வு கடிதம், கல்லூரி சேர்க்கை கடிதம், கல்லூரி கட்டண விவரம், முதல் பட்டதாரி சான்று, உறுதிமொழி சான்று, கடன் பெற விரும்பும் வங்கியின் பெயர் மற்றும் பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here