தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு, கடந்த 7ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு நடைபெற இருப்பதாக கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதற்கிடையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்ததால், குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பல சேதங்களை உண்டாக்கியது. இதன் காரணமாக டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் 14, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இருந்தாலும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி நாளை (டிச. 11) முதல் நடைபெறும் எனவும் உறுதி அளித்துள்ளனர். இந்த சூழலில் அரையாண்டு தேர்வு அட்டவணை மாற்றியமைக்கப்பட்டதால், டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை வழங்கப்படும் விடுமுறையில் மாற்றம் வருமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனாலும் திட்டமிட்டபடி தேர்வும், விடுமுறையும் இருக்கும் என கல்வி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்ததாக கூறப்படுகிறது.