தென்னிந்தியாவில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை வெளுத்து வாங்கி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று மிக்ஜாம் புயலாக மாறக் கூடும். இந்த புயலானது, தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோர பகுதிகளில் வரும் டிசம்பர் 4ஆம் தேதி மையம் கொள்ளும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 4ம் தேதி விடுமுறை அளித்து உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 4ம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.