மதுரை, கோவையை தொடர்ந்து இந்த மாவட்டத்திலும் மெட்ரோ சேவை., அறிக்கை தாக்கல் செய்ய முடிவு!!

0

தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்துவது குறித்த அதிரடி அப்டேட் ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மெட்ரோ சேவை:

தமிழகத்தின் தலைநகரான சென்னையை தொடர்ந்து, மற்ற நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்த நிர்வாகம் திட்டமிட்டது. இதன் முதற்கட்டமாக கோவை மற்றும் மதுரை பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவையை அமைக்க திட்டமிட்டது.

அந்த வகையில் மதுரையில், திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை கிட்டத்தட்ட 31 கிலோமீட்டர் வரை மெட்ரோ ரயில் சேவை அமைக்க டெண்டர் விடப்பட்டு, இதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது 120 நாட்களில் இதை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தற்போது சேலத்திலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மெட்ரோ நிர்வாகம் ஆய்வு நடத்தியுள்ளது.

இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்து ஏப்ரலில் இதற்கான அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்படும் என மெட்ரோ அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் இங்கு மெட்ரோ சேவைக்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here